Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரணைதீவில் 186 ஏக்கர் காணி விடுவிப்பு; கடற்படை இணக்கம்

September 2, 2017
in News, Politics
0
இரணைதீவில் 186 ஏக்கர் காணி விடுவிப்பு; கடற்படை இணக்கம்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பின் முதற் கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (31) பூநகரி பிரதான கடற்படை தளத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான தரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு படையினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது முதலில் இரணைத்தீவு காணிகளை விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் இக் காணியை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்தனர்

இரணைதீவு பகுதி, தேசிய பாதுகாப்புக்கு முக்கிய ஒரு இடமாக இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும் ராடர் கண்காணிப்பு நிலையங்கள் இருப்பதனால் இரணைத்தீவினுடைய வடக்குப் பகுதி முழுமையாகத் தேவையென்றும் கடற்படையினர் குறிப்பிட்டிருந்தனர்.

இதேவேளை அந்தப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றும் போது கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள கடல்வாழ் உயரினங்கள் அழிவடையும். அத்துடன், அங்கு குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என குடியேறுவதை தடுக்கும் வகையில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து 400 வருடங்களுக்கு மேல் இத்தீவிலே மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள், அவர்களது வாழ்வாதாரம் இங்கேதான் இருக்கின்றது. இத்தீவு விடுவிக்கப்படவேண்டுமெனவும் பாரளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இரணைத்தீவுப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 186 ஏக்கர் காணியை அடையாளப்படுத்துவதற்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர். இதற்கான குழுவொன்றை நியமித்து அதன் மூலம் 186 ஏக்கர் காணியையும் அடையாளப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

இதேவேளை இப்பகுதி கடற்தொழிலாளர்கள் படகுகளை நிறுத்துவதற்கு 400 மீற்றர் கரையோரப்பகுதியையும் விடுவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரை மாத்திரம் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த வாரம் பூநகரிப் பிரதேச செயலாளர் மற்றும் இரணைமாதா நகரைச்சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் சென்று காணிகளை அடையாளப்படுத்துவதற்கு அனுமதி வழங்க கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இச் இச்சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோரம்

Next Post

அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்

Next Post
அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்

அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures