Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ராடார்

December 24, 2024
in News, Sri Lanka News
0
இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ராடார்

வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தவும் நம்பகமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை செயல்படுத்தவும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ராடார் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

புத்தளத்தில் இன்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற டொப்ளர் வானிலை ராடார் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் கமோஷிதா நவோக்கி கலந்துகொண்டார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி தர்மதிலக மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜப்பானிய மானிய உதவியினால் நிதியளிக்கப்பட்ட டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு இலங்கையில் நிகழ்நேர மழைவீழ்ச்சியைக் கண்காணிப்பதற்கான திறனை மேம்படுத்துவதையும் வானிலை தொடர்பான அனர்த்தங்களின் தாக்கத்தைத் தணிப்பதையும் மாகக் கொண்டுள்ளது.

வானிலை கண்காணிப்பு ரேடார் கோபுரம், மத்திய செயலாக்க அமைப்பு மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றை நிறுவுவதன் மூலம் இந்த நோக்கம் அடையப்படும்.

இந்த திட்டம் வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தும், மேலும் நம்பகமான முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை இது செயல்படுத்துகிறது, மேலும் வெளியேற்ற வழிகாட்டுதலில் உதவுகிறது, இதனால் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.

காமோஷிதா தனது உரையில், பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இலங்கைக்கு ஆதரவாக நிற்பதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் மேலும் வலியுறுத்தினார், மேலும் இந்த திட்டம் பாதுகாப்பான மற்றும் மிகவும் நெகிழ்வான சமூகத்தை கட்டியெழுப்ப உதவும் என்று நம்பிகை தெரிவித்ததார்.

Previous Post

சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை | பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் | சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர்

Next Post

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

Next Post
இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures