Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று இரவு 7.30 இற்கு இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான கலந்துரையாடல்!!

February 23, 2021
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் ஆரம்பமானது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த முறை காணொளி ஊடாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை ஊக்குவித்தல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இந்த அமர்வின் 20 ஆவது விடயமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானம் பல்வேறு நாடுகள் இணைந்த கூட்டுக் குழுவினால் முன்வைக்கப்படவுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா, Montenegro, மலாவி மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த தீர்மானத்தை முன்வைக்கவுளள்ன.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனம் செய்வதை இடைநிறுத்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் 13 ஆவது திருத்தத்தை உறுதி செய்தல் ஆகிய விடயங்கள் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, காணொளி தொழிநுட்பம் ஊடாக இன்றைய தினம் உரையாற்றவுள்ளார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்றும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளது.

சர்வதேச உறவுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான கலந்துரையாடல், இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 இற்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரபாகரனின் காணொளியை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய 25 வயது இளைஞன் கைது!!

Next Post

வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டம்

Next Post

வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures