Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்த அரசாங்கம் வீடு செல்லட்டும்- மஹிந்த

September 23, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் வெளிப்படையாகவே கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கி எவ்வாறு வழிநடாத்த முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

கொழும்பில்  நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்று இல்லாமையே டொலர் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கும் காரணமாகும். நாம் நாட்டை கையளிக்கும் போது டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாயாகவே காணப்பட்டது.

தற்பொழுது அது 170 ரூபாவையும் தாண்டிச் சென்றுள்ளது. நாட்டின் தலைவர்கள் இந்த டொலர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவதாயின் அரசாங்கம் ஒன்று எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தது போதும் எனவும், தம்மிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறும் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

Previous Post

நாமல் குமார நாளை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

Next Post

2019 மார்ச் ஆகும் போது டொலர் விலை 200 ரூபாவைத் தாண்டும்

Next Post

2019 மார்ச் ஆகும் போது டொலர் விலை 200 ரூபாவைத் தாண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures