ஸ்ரீலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக்மாரப்பன இன்று இந்திய பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
வெளிவிவகார அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் திலக்மாரப்பன தனது முதல் விஜயமாக நேற்று இந்தியா சென்றிருந்தார்.
இதன்படி. இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நாளைய தினத்துடன் வெளிவிவகாரஅமைச்சரின் இந்திய விஜயம் நிறைவடையவுள்ளதுடன், அவருடன் சென்ற வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவும் நாடு திரும்பவுள்ளது.

