கிரிக்கெட் உலகமே அதிகம் எதிர்பார்க்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து துணைக்கண்டத்தில் துவங்குகிறது.இந்த உலககோப்பை தொடருக்கு தயாராகும் விதத்தில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் தீவிரமான பயிற்சியில் களமிறங்கியுள்ளன.இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
கபில்தேவ் கூறிய அறிவுரையில்:
“டெண்டுல்கர்,கங்குலி,டிராவிட்,சேவாக்,லட்சுமணன் ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி திணறும் என எதிர்ப்பார்த்த நிலையில்,இளம் வீரர்களால் எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.கிரிக்கெட் விளையாட்டை பொறுத்த வரையில் அணியில் அனைவரும் ஆக்ரோஷமாக இருந்தாலும் சிக்கல்,அமைதியாக இருந்தாலும் சிக்கல் தான்.இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் கேப்டன் கோலியின் ஆக்ரோஷமும், தோனியின் அமைதியும் அவசியம்.
எனவே கோலி, தோனியை போல ஆக்ரோஷமும், அமைதியும் சம அளவில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பயனளிக்கும்.
ஜடேஜா,அஸ்வின் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.இது சற்று வருத்தமாக செய்தியாக இருந்தாலும்,ரிஸ்ட் ஸ்பின்னர்களான சஹால் மற்றும் குலதீப் யாதவ் தங்கள் பணியை மேலும் மேம்படுத்தி இந்திய அணிக்கு வெற்றிக்கு உதவுகிறார்கள்.ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெருக்கடி இல்லாமல் விளையாட வேண்டும். மற்ற ஆல்ரவுண்டர்களோடு ஒப்பிடும் போது ஹர்திக் பாண்டியா மீது அதிக அழுத்தம் வைக்கப்படுவதாக கருதுகிறேன்.
பாண்டியா பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினாலே பந்து வீச்சு தானகவே வந்து விடும்.அழுத்தமின்றி,நெருக்கடியின்றி கவனம் சிதறாமல் விளையாடினால் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என கபில்தேவ் கூறினார்.