அமெரிக்காவைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி பெண், மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான, கோஸ்டாரிகா கடலில், விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போது, சுறா மீன் கடித்து உயிரிழந்தார்.
அமெரிக்காவில், நியூயார்க் நகரில் வசித்து வந்தவர், ரோஹினா பண்டாரி, 49. இந்திய வம்சாவளி பெண்ணான இவர், பங்குச் சந்தை துறையில், மேலாளராக பணியாற்றி வந்தார். கோஸ்டாரிகாவில் உள்ள கடலில், ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும், ஆழ்கடல் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட சென்ற, 18 பேர் குழுவில், ரோஹினா பண்டாரி இடம் பெற்றிருந்தார்.
கடலில், ஸ்கூபா டைவிங் செய்த போது, ‘டைகர் ஷார்க்’ எனப்படும், கொடிய வகை சுறாக்கள், ரோஹினாவில் கால்களை கடித்து துண்டித்தன. அபாய நிலையில் மீட்கப்பட்ட ரோஹினா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ரோஹினாவுடன், ஆழ்கடலில், ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்ட பயிற்சியாளர் ஒருவரையும், சுறாக்கள் கடித்தன. இருப்பினும், பெரியளவில் காயம் ஏற்படாமல் அவர் தப்பித்தார்.