Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

September 8, 2017
in News
0
ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக எதிர்வரும் மூன்று தினங்­க­ளுக்கு நாட்டின் ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்­கான அபாயம் இருப்­ப­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இவ்­ அ­னர்த்­தத்­தி­லி­ருந்து மக்­களை பாது­காப்­ப­தற்­கான சகல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளையும், பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் அநு­ர ­பி­ரி­ய­தர்­ஷ­ன­ யாப்பா தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக களுத்­துறை, கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி, நுவ­ரெ­லியா உள்­ளிட்ட மாவட்­டங்­களில் எதிர்­வரும் 24 மணித்­தி­யா­லங்­களில் மண்­ச­ரிவு ஏற்­ப­டு­வ­தற்கு அபாயம் இருக்­கின்­றது. ஏனைய மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் காணப்படுகிறது. குறிப்­பாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அம்­ப­க­முவ பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்கள், களுத்­துறை மாவட்­டத்தின் அக­ல­வத்தை, புளத்­சிங்­கள, பலிந்­த­நு­வர ஆகிய பிர­தேச சபை­க­ளுக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளுக்கும் கேகாலை மாவட்­டத்தின் யட்­டி­யாந்­தோட்டை பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்கும் மண்சரிவு ஏற்­ப­டு­வ­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் குரு­விட்ட பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்மித்த பகு­தி­க­ளுக்கும், காலி மாவட்­டத்­தின் நெலுவ பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்மித்த பகு­தி­கள், யத்­த­ள­மத்த பிர­தே­சத்­திலும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் தேசிய கட்­டட ஆய்­வுகள் நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்­நி­லையில் குக்­கு­லே­ கங்­கையின் நீர்­மட்டம் அதி­க­ரித்­ததால் அதன் வான்­க­த­வுகள் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளன. இதனால் அதனை அண்­டிய பகு­தியில் வாழ்ந்து வந்த மக்­களை பாது­காப்­பான பகு­தி­களில் குடி­ய­மர்த்­து­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மேலும் கம்­பஹா, கொழும்பு உட்­பட பிர­தான நீர்த்­தேக்­கங்­களை அண்மித்த பகு­தி­களில் தற்­போது சிறு அள­வி­லான வெள்ளம் ஏற்­பட்­டுள்­ளது. இருப்­பினும் எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்கு தொடர்ந்து அவ­தானம் செலுத்­தப்­படும்.

மேலும் அனர்த்த நிலை­யி­லி­ருந்து மக்­களை பாது­காப்­ப­தற்கு அர­சாங்­கத்­தினால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. துரி­த­க­தியில் உத­வு­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இது தொடர்பில் முன்­கூட்­டியே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை வெள்ளம் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் மக்­களை பாது­காப்­ப­தற்கு இரத்­தி­ன­புரி மாவட்­டத்­திற்கு 5 தண்­ணீர் பவு­ஸர்­களும் 15 பட­கு­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் களுத்­துறை மாவட்­டத்­திற்­கு 40 பட­கு­களும், இரத்­தி­ன­புரி மாவட்­டத்திற்கு 14 படகுகளும், வழங்கப்பட்டு சகல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அனர்த்த முகாமைத்துவத் தின் நிவாரண உதவிப் பிரிவினர் 24 மணித்தியால சேவையை வழங்கவுள்ளதுடன் உதவிகளையும் கோர முடியும் என்றார்.

Previous Post

புதிய இறைவரி சட்டத்தின் மூலம் 45 பில்லியன் ரூபா வருமானம்

Next Post

வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை.!

Next Post
வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை.!

வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures