Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அஷ்ரப்பை ஏன், திடீ­ரென தேடு­கி­றார்கள்? பேரியலுக்கு சந்தேகம்

November 13, 2017
in News, Politics
0
அஷ்ரப்பை ஏன், திடீ­ரென தேடு­கி­றார்கள்? பேரியலுக்கு சந்தேகம்

‘எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக 17 வரு­டங்­களின் பின்பு ஏன் திடீ­ரென தேடு­கி­றார்கள்? எனக்குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. இத்­தனை காலம் அமைச்சுப் பத­வி­க­ளிலும் அர­சாங்­கத்தின் உயர் பத­வி­க­ளிலும் இருந்த அவர்கள் அப்­போது இது தொடர்­பாக ஏன் தேடிப்­பார்க்­க­வில்லை?” என கேள்­வி­யெ­ழுப்­பினார் முன்னாள் அமைச்­சரும், மர்ஹூம் அஷ்­ரபின் துணை­வி­யா­ரு­மான பேரியல் அஷ்ரப்.

மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் மர­ண­மா­ன­தை­ய­டுத்து விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­தி­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் முயன்­ற­போது அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது. பின்பு தகவல் அறியும் ஆணைக்­கு­ழுவில் இது தொடர்பில் மேன்­மு­றை­யீடு செய்­த­போது குறித்த அறிக்கை தேசிய சுவ­டிகள் காப்­ப­கத்­தி­லி­ருந்து காணாமற் போயுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் மர்ஹூம் அஷ்­ரபின் துணை­வி­யா­ரிடம் ‘விடி­வெள்ளி’ வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

“மர்ஹூம் அஷ்­ரபின் மர­ணத்­துக்­கான கார­ணத்­தையும் அதன் பின்­ன­ணி­யையும் இப்­போது தேடு­ப­வர்கள் அவர்கள் பத­வி­களில் இருந்­த­போது தேடி­யி­ருந்தால் இர­க­சி­யங்கள் வெளிப்­பட்­டி­ருக்கும். ஏன் இப்­போது திடீரெனத் தேடு­வ­தற்­கான அவ­சியம் ஏற்­பட்­டது. அவரின் மரணம் ஏற்­ப­டுத்­திய அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீண்­டி­ருக்கும் எனக்கும் எனது மக­னுக்கும் இது கஷ்­ட­மாக இருக்­கி­றது.
17 வரு­டங்­களின் பின்பு பழைய கதை­க­ளையும் சம்­ப­வங்­க­ளையும் கிண்டி எடுக்க வேண்­டிய நோக்கம் என்ன? அவர்­க­ளுக்குத் தெரிந்த இர­க­சி­யங்கள் ஏதும் இருக்­கின்­ற­னவா என்­பது தெரி­ய­வில்லை.

அனைத்து விட­யங்­களும் அப்­போ­தைய ஜனா­தி­ப­தியின் காலத்தில் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் முன்னால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 17 வரு­டங்­களின் பின் இதனைத் தேடிப்­பார்த்து என்ன செய்­யப்­போ­கி­றார்கள்? இதன் நோக்கம் என்ன ? என்றார்.

மர்ஹும் அஷ்ரப் பய­ணித்த ஹெலி­கொப்டர் 2000 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16 ஆம் திகதி அர­நா­யக்க, குமா­ர­புர, ஊரா­கந்த மலைப் பிர­தே­சத்தில் விபத்­துக்­குள்­ளா­கி­யது. விபத்தில் அஷ்ரப் உட்­பட 15 பேர் பலி­யா­னார்கள்.

இந்த விபத்து தொடர்பில் விசா­ரணை நடாத்தி அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்க நீதி­பதி எல்.கே.ஜி.வீர­சே­கர தலை­மையில் ஆணைக்குழு ஒன்றினை நியமித்தார். ஆணைக்குழுவின் அறிக்கை 2017 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுவடிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து அறிக்கை காணாமற் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஈரான் – ஈராக் நிலநடுக்கத்தில் 200 பேர் மரணம் 1,686 பேர் காயம்

Next Post

ஜனாதிபதிக்கு கவிதை எழுதிவைத்துவிட்டு, உலகை விட்டுச்சென்ற யுவதி

Next Post
ஜனாதிபதிக்கு கவிதை எழுதிவைத்துவிட்டு, உலகை விட்டுச்சென்ற யுவதி

ஜனாதிபதிக்கு கவிதை எழுதிவைத்துவிட்டு, உலகை விட்டுச்சென்ற யுவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures