விஷால் நடித்த இரும்புத்திரை படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலைகாரன் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 15 படத்தை இயக்குகிறார் பி.எஸ்.மித்ரன். பிப்ரவரி 15-ந்தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திலும் அர்ஜூன் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அவர் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஆக, விஷால், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் மோதப்போகிறார் அர்ஜூன்.