Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் எவரும் ஈடுபடக்கூடாது | மஹிந்த

January 17, 2022
in News, Sri Lanka News
0
தமிழ் சினிமாவில் முதல் வார ஓப்பனிங்கில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள்- இதோ

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் கரங்களாகப் பங்காளிக் கட்சிகள் உள்ளன எனவும் இந்தக் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அரசைக் கவிழ்க்கும் முயற்சிகளில் இவர்கள் எவரும் ஈடுபடக்கூடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் மேலும் தெரிவித்ததாவது,

“அரசுக்குள் இருப்பவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிடக்கூடாது. அவர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

அரசுக்குள் இருக்கும் ஒரு சிலர் வெளியிடும் விமர்சனங்களை வைத்துக்கொண்டு அரசுக்குள் பெரும் பிளவு என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. எனவே, ஊடகங்களும் உண்மைகளை அறிந்து பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.

ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்துக்கொண்டு எதிரணியினரும் தத்தமது அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம் என்று சூளுரைக்கும் சஜித் அணியினர் கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள்? நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை அவர்கள் நாசமாக்கியதை மக்கள் மறக்கமாட்டார்கள்.

அதற்கான பதிலடிகளைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் , நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் வழங்கியுள்ளனர். எமது அரசு சீரான பாதையில் பயணிக்கின்றது. மக்கள் நலன் கருதி இவ்வருடம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

 

Previous Post

கருத்துச்சித்திரம்

Next Post

தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

Next Post
தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த  விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures