Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியலில் இருந்து மோடி ஓய்வுபெற்றுவிட்டு இமயமலைக்குப் போக வேண்டும்

December 20, 2017
in News, Politics, World
0

பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டும் என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி காட்டமாக கூறியுள்ளார். குஜராத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் வட்காம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புதிய ஆதர்ச நாயகனாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார் மேவானி.

தமது தேர்தல் வெற்றி தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது: குஜராத்தில் 150 இடங்களில் வெல்வோம் என பேசினார்கள். ஆனால் அவர்களது கனவு தகர்ந்து போனது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்கப் போகிறது.

எங்கள் இயக்கத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது. இனிவரும் நாட்களில் சட்டசபையிலும் வீதிகளும் எங்களது செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும். பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டியதுதான். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிடம் இருந்து நன்கொடை பெற்றது உண்மைதான். இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார்.

Previous Post

சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்தவேண்டி அவசியம்து குறித்து

Next Post

ஜெ. மரணத்தை வைத்து கீழ்த்தர அரசியல் செய்கிறார்கள்

Next Post

ஜெ. மரணத்தை வைத்து கீழ்த்தர அரசியல் செய்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures