Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமியின் தந்தை கைது!

October 24, 2017
in News, Politics
0

அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், வெஸ்லி மேத்யூஸ்; கேரளாவை பூர்வீகமாக உடைய இவர், பீஹாரைச் சேர்ந்த, ஷெரீன், 3, என்ற சிறுமியை, கடந்தாண்டு தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஷெரீன், உடல், மன வளர்ச்சி குறைந்த குழந்தை.கடந்த, ௭ல், ஷெரீன், பால் குடிக்க மறுத்ததால், வீட்டுக்கு வெளியே நிற்கும்படி, மேத்யூஸ் தெரிவித்தார்; வீட்டுக்கு வெளியே சென்ற, சிறுமி தொலைந்து போனாள்.

இந்த வழக்கில், மேத்யூசை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்துள்ளனர். அவர் மீது சந்தேகம் நீடிக்கும் நிலையில், இரண்டு வாரங்களாகியும் சிறுமி, ஷெரீனை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் , சிறுமி ஒருவரின் உடல் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மாயமான சிறுமியின் உடலா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மேத்யூஸ் போலீசாரிடம் சென்று வாக்குமூலம் அளித்துள்ளார். இது முந்தைய வாக்குமூலத்திற்கு முரணாக இருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் என்ன வாக்குமூலம் அளித்தார் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

Previous Post

‘சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஜி ஜின்பிங்’

Next Post

ஆஸ்திரேலியாவில் முதலை பொறிக்குள் சென்று 4 பேர் புகைப்படம் எடுத்ததால் பரபரப்பு

Next Post

ஆஸ்திரேலியாவில் முதலை பொறிக்குள் சென்று 4 பேர் புகைப்படம் எடுத்ததால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures