ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்திற்கு பிறகு தமிழில் கேம் ஓவர் என்ற படத்தில் நடித்துள்ளார் டாப்சி. சமீபகாலமாக தென்னிந்திய மொழிகளை விட ஹிந்தியில் அதிக படங்களில் நடித்து வரும் டாப்சி, கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
அதில் பிங்க், நாம் சபானா மற்றும் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடித்த மன்மரிஷான் ஆகிய படங்கள் டாப்சிக்கு பெரிய ஹிட்டாக அமைந்தன. இந்த நிலையில், தற்போது மீண்டும் அனுராக் காஷ்யப் இயக்கும் ஒரு திரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் டாப்சி. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படம் 2020ல் திரைக்கு வருகிறது.