உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களை பயமுறுத்திவரும் ஹேக்கர்கள் மற்றும் மால்வேர் தாக்குதல் ஆசாமிகள் தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் நுழைந்துவிட்டனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள் ஃபேஸ்புக் மெசஞ்சரில் போலியான விளம்பரத்தை பதிவு செய்து அந்த விளம்பரத்தை க்ளிக் செய்தால் பிரபல இணையதளங்களின் டூப்ளிகேட் இணையதளத்திற்கு வரவழைத்து அதன்மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். இந்த நூதன முறையின்படி மால்வேர் ஆசாமிகள் பல்வேறு வகைகளில் விளம்பரங்களை கிளிக் செய்ய வைத்து அதிக வருமானம் செய்து வருவதாக உலகின் முன்னனி ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் சீனியர் செக்யூரிட்டி அதிகாரி டேவிட் ஜேக்கோபி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த வகை போலி விளம்பரங்களின் மூலம் கம்ப்யூட்டரும் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள முக்கிய தகவல்களை திருடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக இந்த வகை விளம்பரங்கள் பாப்-அப் வடிவில் நீங்கள் சேட் செய்து கொண்டிருக்கும் நண்பரின் அக்கவுண்டில் தோன்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே ஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் தோன்று விளமபரங்களை க்ளிக் செய்யும் முன் அது உண்மையான விளம்பரம் தானா என்பதை அறிந்து கொண்டு க்ளிக் செய்யுங்கள்