‘வட சென்னை’ படப்பிடிப்பு துவக்கம்: 3 பாகங்கள் என தனுஷ் தகவல்

‘வட சென்னை’ படப்பிடிப்பு துவக்கம்: 3 பாகங்கள் என தனுஷ் தகவல்

 

 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியிருக்கிறது.

‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து, அடுத்து இயக்கவிருந்த ‘வடசென்னை’ படத்தில் கவனம் செலுத்தி வருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது.

இந்நிலையில், இன்று படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் உடன் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, சமந்தா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.

மேலும், “’வடசென்னை’ – மூன்று பாகங்கள். முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது” என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

‘வட சென்னை’ இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது கதை மிகவும் பெரியது என்பதால் மூன்று பாகங்களாக படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News