Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்று தடவைகள் கொல்லப்பட்ட பிரபாகரன்! மரபணு பரிசோதனை நடத்த கோரிக்கை.

June 26, 2016
in News
0

மூன்று தடவைகள் கொல்லப்பட்ட பிரபாகரன்! மரபணு பரிசோதனை நடத்த கோரிக்கை.

இறுதிப் போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்று இராணுவத்தினரால் காண்பிக்கப்பட்ட உடல் அவருடையது இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என காண்பிக்கப்பட்ட உடலை மரபணு பரிசோதனைக்குட்படுத்த அரசு விரும்பினால் கனடா மற்றும் டென்மாக்கில் உள்ள அவரது சகோதரியும், சகோதரனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என அறிவிக்கப்பட்டவேளை நான் இந்தியாவில் இருந்தேன். இலங்கை இராணுவத்தினர் காண்பித்தது அவரின் உடலா என்பது குறித்து எனக்கு சந்தேகங்கள் உள்ளன.

அவர் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் உலகின் எங்கோ ஒரு பகுதியில் மறைந்திருக்கின்றாரா என்பதும் உங்களுக்குத் தெரியாது.

பிரபாகரனின் உடல் எனக் காண்பிக்கப்பட்ட உடல் இன்னமும் மரபணு பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை. இந்தியா இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்தேன்.

கருணா அம்மானும் தயா மாஸ்டரும் எதனையும் தெரிவிக்கலாம். என்னால பிரபாகரனை அடையாளம் காண முடியும். அவரது கன்னத்தில் அடையாளமொன்று உள்ளது.

மேலும், முகச்சவரம் செய்யப்பட்ட உடல் ஒன்றை அவர்கள் காண்பித்தனர். அந்தச் சூழ்நிலையில் பிரபாகரன் முகச்சவரம் செய்திருப்பார் என என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாது.

நான் இதனை என்னைப் பற்றிய விளம்பரத்திற்காகத் தெரிவிக்கவில்லை. பிரபாகரனின் மரணம் குறித்து பலரும் வெளியிட்ட அறிக்கைகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டது என்றார். சிலர் அவரது சாம்பல் கடலில் தூவப்பட்டது என்கின்றனர்.

பிரபாகரன் மாத்திரமல்ல பொட்டு அம்மானும் எங்கிருக்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அவரது உடலும் மீட்கப்படவில்லை. அவர்கள் தங்களை அழித்துக்கொண்டிருக்கலாம் அல்லது உலகின் எங்கோ ஒரு பகுதியில் வாழலாம்.

பிரபாகரனின் பெற்றோரின் அஸ்தி இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளது. அரசு விரும்பினால் நான் அவற்றை மரபணு பரிசோதனைக்கு வழங்கத் தயார். நான் பிரபாகரனின் உடலை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் என அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன். ஆனால், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு மனிதர் ஒரு தடவைதான் இறப்பார். ஆனால், பிரபாகரன் மே 17,18,19ம் திகதிகளில் இறந்தார் என்று இராணுவத்தினரும் அரச தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டனர் என்றார்.

Tags: Featured
Previous Post

சொந்த மகள்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தாயார்: காரணம் என்ன?

Next Post

3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை- சிறுநீரகத்தை விற்க முயலும் பரிதாபம்

Next Post
3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை- சிறுநீரகத்தை விற்க முயலும் பரிதாபம்

3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை- சிறுநீரகத்தை விற்க முயலும் பரிதாபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

June 11, 2026
மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

June 11, 2026

Recent News

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

June 11, 2026
மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

June 11, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures