Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டுவந்த தமிழர்!

June 20, 2016
in News
0
ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டுவந்த தமிழர்!

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டுவந்த தமிழர்!

1987 மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கும் நிறைவேற்றப் படுவதற்கும் காரணமான மனித உரிமை செயற்பாட்டாளர் சேவியர் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் என மனிதவுரிமை செயற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் ஜூன் 10. 2016 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் காலம் ஆகினார்.

அவரின் நினைவு தினம் அண்மையில் மட்டக்களப்பு மனித உரிமைகள் இல்லத்தில் நடைபெற்ற போதே மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டு வரப்படுவதற்கும் நிறைவேற்றப் படுவதற்கும் உழைத்த மனிதர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜூலை 25, 1933இல் யாழ்ப்பாணம் நாரந்தனையில் பிறந்த இவர், தனது இளமைக்காலத்தினை யாழ்ப்பாணத்திலேயே கழித்திருந்தார். ஆரம்பத்தில் தபாலதிபராக நியமணம் பெற்றிருந்த அவர் தனது விடாமுயற்சி, கல்வியறிவு மற்றும் தனிப்பட்ட ஆளுமைகளின் காரணமாக இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதியினை பெற்று சட்டத்தரணியானார்.

இலங்கையில் இனமுரண்பாடுகள் காரணமாக நலிவுற்றிருந்த தமிழ் சமூகத்திற்கு தன்னார்வத்தின் அடிப்படையில் சேவையாற்றத்தொடங்கிய இவர் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் இல்லத்தினை ஸ்தாபித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட ரீதியான தனது இலவச சேவைகளை நிறுவனமயப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கிவந்த மனித உரிமைகள் இல்லத்தின் கிளையினை அக்காலக் கட்டத்திலிருந்த அவசியப்பாடுகளின் அடிப்படையில் 1984இல் கொழும்பில் ஆரம்பித்திருந்தார்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் தொடர்பில் உலக அரங்கில் அனைவரதும் கவனத்தினை ஈர்ப்பதில் பெரிதும் பாடுபட்டுவந்த திருவாளர். சேவியர் அவர்கள் 1987 மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முதல் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கும் நிறைவேற்றப் படுவதற்கும் முதற்காரணமானவராவார்.

மேலும் ஜெனீவாவை தளமாக கொண்டியங்கும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நாவின் வலையமைப்பில் மூன்று ஆண்டுகள் வரை பணியாற்றியிருந்த அவர் அதன் பின்னதாக இலங்கைக்கு திரும்பி தனது பணிகளை தொடர்ந்த நிலையில், 1988 காலப்பகுதியில் சட்டத்தரணி கே.கந்தசாமி (ரி.ஆர்.ஓ) அவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டதனை தொடர்ந்து, திருவாளர். சேவியர் மீதும் உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் கனடாவிற்கு தனது குடும்பத்தோடு புலம்பெயர்வதற்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருந்த இவர் அங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கான சட்ட உதவிகளை வழங்குவதில் ஆர்வத்தோடு செயற்பட்டு வந்துள்ளார். மேலும், சிறைகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பில் முன்னின்று குரல் கொடுத்த இவர், 1983ம் ஆண்டு தொடங்கி பிரபல வழக்குகளான கொக்கட்டிச்சோலை நல்லநாயகம், வண. பிதா. சிங்கராஜா, என். நித்தியானந்தம் மற்றும் தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் பலரதும் வழக்குகளுக்கு இவரே சட்ட உதவிகளை வழங்கியிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட வடிவிலான ஆவணப்படுத்தல் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதற்கான தகுந்த நடவடிக்கைகளையும் இவர் மேற்கொண்டிருந்தார்.

இவரால் ஸ்தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் இல்லமானது தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தனது கிளைகளை பரப்பி பல்லாயிரக்கணக்கிலான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்களுக்காக சேவையாற்றி வருவதற்கு தனது ஆதரவினையும் ஒத்தாசையினையும் இவர் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.

போர் மற்றும் இனமுரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வு தொடர்பில் மிகவும் கரிசனையோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அல்லது பெற்றுக்கொடுப்பதில் தன்னாலான பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருந்த திருவாளர். பிரான்சிஸ் சேவியர் ஐயா அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகள் சார்ந்த பணிகளுக்காகவும், சிறையிடப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தமிழ் மக்களின் நலனுக்காகவும் தன்னாலான அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த இவரின் மறைவானது தமிழ் சமூகத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும் என்பது என்றும் நினைவில் கொள்ளத்தக்கது.

Tags: Featured
Previous Post

இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை

Next Post

அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே விரும்புகிறோம்! இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள்

Next Post
கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே விரும்புகிறோம்! இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures