Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

March 29, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் – விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 25

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கம் ஆகியன இவ் வருடம் நடத்தும் 21ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்கள் உட்பட இலங்கை முழுவதிலும் இருந்து 5000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்குபற்றவுள்ளன.

கொவிட் – 19 தொற்றுநோய், எழுச்சிப் போராட்டம் ஆகியன காரணமாக 2 வருடங்கள் நடத்தப்படாமலிருந்த இப் போட்டியை இந்த வருடம் பிரமாண்டமான வகையில் நடத்த போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் பாடசாலைகள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

விண்ணப்பப் படிவங்களை நாடு முழுவதும் உள்ள DSI காட்சிகூட பிரதிநிதிகள், 25 மாவட்டங்களின் இணைப்பாளர்கள், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் (011-2669344), இலங்கை பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கம் (சமிந்த 077 3329702) ஆகியோரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு (ஏ.எஸ். நாலக்க, பொதுச் செயலாளர், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம்) அனுப்பிவைக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி 2023 ஏப்ரல் 25ஆம் திகதியாகும்.

கடந்த காலங்களில் வலய மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்டுவந்த இந்த சுற்றுப் போட்டியில் மேலும் போட்டித்தன்மையை ஏற்படுத்தும் வகையில் மாகாண மட்ட சுற்று இணைக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிப்பொனில் செவ்வாய்க்கிழமை (28) மாலை நடைபெற்ற இப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் உபாலி அமரதுங்க தெரிவித்தார்.

‘1999இல் 198 பாடசாலை அணிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தற்போது நாடளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ளது. கடைசியாக நடத்தப்பட்ட சுற்றுப் போட்டியில் 3,000 பாடசாலை அணிகள் பங்குபற்றின. இந்த வருடம் அந்த எண்ணிக்கை 5000ஐக் கடக்கும் என நம்புகிறேன்’ என இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் காஞ்சன ஜயரட்ன குறிப்பிட்டார்.

இந்த வருடப் போட்டிகளில் வட பகுதியிலிருந்தும் மலையகத்திலிருந்தும் பெருமளவிலான பாடசாலைகள் பங்குபற்றும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

‘சிறிய அளவில் ஆரம்பித்து தற்போது நூற்றுக்கணக்கான பாடசாலைகள் பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டிக்கு 21வருடங்களாக அனசரணை வழங்க கிடைத்ததையிட்டு பெருமை அடைகிறோம். தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை மேம்படுத்தி மேலும் பிரபல்யம் அடையச் செய்வதற்கு முக்கிய பங்காற்றுவோம்.

அத்துடன் எமது அனுசரணை இன்னும் பல்லாண்டுகளுக்கு தொடரும்’ என டி.எஸ்.ஐ. செம்சன் குறூப் பிறைவேட் லிமிட்டெட் முகாமைத்துவப் பணிப்பாளர் துசித்த ராஜபக்ச கூறினார்.

13, 15, 17, 19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட நான்கு பிரிவுகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்.

மாவட்ட மட்டப் போட்டிகள் மே 13ஆம் திகதி ஆரம்பமாகி 20ஆம் திகதி நிறைவடையும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெறும்.

மாகாண மட்டப் போட்டிகள் ஜூலை 1, 2, 8, 9, 15ஆம் திகதிகளில் நடத்தப்படும். மாகாண மட்டப் போட்டிகள் நிறைவில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் தேசிய மட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்றும்.

தேசிய மட்ட இறுதிச் சுற்று ஜூலை 21, 22, 23, 24ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு இறுதிப் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆகஸ்ட் 19ஆம், 20ஆம் திகதிகளில் நடத்தப்படும்.

Previous Post

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல் ; மார்ச் 31 இல் ஆரம்பம்

Next Post

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

Next Post
பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஸ்பெய்னில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

June 6, 2026
பெத்தி- திரைப்பட விமர்சனம்

பெத்தி- திரைப்பட விமர்சனம்

June 6, 2026
நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026

Recent News

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

June 6, 2026
பெத்தி- திரைப்பட விமர்சனம்

பெத்தி- திரைப்பட விமர்சனம்

June 6, 2026
நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures