Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அல்லைப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி

May 18, 2020
in News, Politics, World
0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் நினைவு நாளான இன்றையதினம் மாலை அல்லைப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட பொது மக்களின் நினைவாகவும், காணாமல் ஆக்கப்பட்ட ஜிம்பிராவுன் பாதிரியாரின் நினைவாகவும் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இராணுவம், பொலிஸார் குறித்த அஞ்சலி நிகழ்வினை நடத்துவதை தடுப்பதற்கு சில முயட்சிகள் மேற்கொண்டிருந்த போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.

கொரோனா இடர் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகளை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை தனிமைப்படுத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இருப்பினும் இன்று மீளாய்வு மனுவினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது மேற்படி உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை அல்லைப்பிட்டி படுகொலையை நினைவு கூறும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மேற்படி அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

Previous Post

பச்சிலைபள்ளியில் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு

Next Post

எப்போது வெளியாகும் ‘மாஸ்டர்’

Next Post

எப்போது வெளியாகும் 'மாஸ்டர்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures