Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்க நடவடிக்கை 

May 16, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக செயலிழந்துள்ள தனியார் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தின் அரைவாசி அல்லது குறைந்தபட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தின் அரைவாசி அல்லது குறைந்தபட்சம் 14,500 ரூபா ஆகிய இரண்டில் எது கூடுதலானதோ அத்தொகையை சம்பளமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து இலங்கையிலுள்ள முதலாளிமார் சம்மேளனம் உள்ளிட்டவர்களுடன் இது தொடர்பிலான பல்வேறு விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இம்முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது கொவிட்-19 வைரஸ் காரணமாக தனியார் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற, ஊழியர் சேமலாப நிதியம் செலுத்தப்படும், சம்பளப் பட்டியலில் சம்பளம் பெற்று வரும் எந்தவொரு ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்காதிருக்கவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் தமது தொழில்துறையை மூடாது, மீளக் கட்டியமைத்து, புத்துயிர் பெறப்படும் வரை, மாதாந்த சம்பளத்தின் அரைவாசி அல்லது குறைந்தபட்சம் ரூபா 14,500 ஆகிய இரண்டில் எது கூடுதலானதோ அத்தொகையை சம்பளமாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது தொழில் வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் தொழில் வழங்குநருக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவுக்கு குறைக்கும் வகையிலும் இத்தீர்மானம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

சம்பளம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர்களின் அறக்கட்டளை நிதி, கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தொழில் தருநர் செலுத்த வேண்டிய கடப்பாடுகளுக்குள் காணப்படும் நிலையில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகமாக தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற ஊழியர்கள் காணப்படுகின்றனர். சிறு, நடுத்தர, பாரிய கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள இவர்கள் பொருளாதார இயந்திரத்தின் பெரும் பங்கை வகிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு பாரமற்ற ஒன்றாக தனியார் பிரிவு காணப்படுவதோடு, அரசாங்கத்திற்கு வருமானம் வழங்குகின்ற, வரி செலுத்துகின்ற பிரிவாகவும் அது காணப்படுவதோடு, பெருமளவிலானோருக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் தருகின்ற ஒரு பிரிவாகவும் அது காணப்படுகின்றது என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் மாத்திரமல்லாது, தனியார் பிரிவு உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கஷ்டத்துக்கு முகம் கொடுத்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு, வருமானம் இன்றிய நிலையில் பல இலட்சக்கணக்கானோருக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது எனும் பிரச்சினை எழுகின்றது. மேற்கத்திய நாடுகளில் இப்பிரச்சினைக்கு வீடுகளுக்கு அனுப்புவதே தீர்வாக காணப்படுகின்றது என தெரிவித்த அமைச்சர், இலங்கையில் அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

Previous Post

மட்டக்களப்பு கல்லடியில் வாள் வெட்டு ஒருவர் பலி!!

Next Post

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures