Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து பதில் இல்லை – சுகாஸ்

May 13, 2020
in News, Politics, World
0

பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து இன்னும் பதில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விவாதிப்பதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு க.சுகாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

குறித்த அழைப்புக்கு 24 மணித்தியாலங்கள் கடந்தும் எந்தவொரு பதிலும் வராத நிலையிலேயே க.சுகாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய ஆயுதப் போராட்டமும், அதன் வளிமுறையும் பிழையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு நேற்றைய தினம் எங்களுடைய கண்டனத்தை தெரிவித்து அவருக்கு அத்தகைய கருத்தை தெரிவிப்பதற்கு அருகதையோ, தகுதியோ கிடையாது என்ற விடையத்தையும் தெரிவித்திருந்தோம்.

அது மாத்திரமில்லாமல் நான் திரு.சுமந்திரன் அவர்களுக்கு பகிரங்கமாக ஒரு சவாலையும் விடுத்திருந்தேன்.

திரு.சுமந்திரன் அவர்களுக்கு முதுகெலும்பிருந்தால் தேசியத் தலைவருடைய ஆயுதப் போராட்டம் சரியா? தவறா? பகிரங்கமாக பொதுத்தளத்திலே ஒரு பகிரங்க விவாதத்திக்கு நான் தயாராக இருக்கின்றேன் முடிந்தால் வாருங்கள் கருத்துக்களால் மோதி பார்ப்போம் என்று தெரிவித்திருந்தேன்.

24 மணித்தியாலங்கள் கடக்கின்றது இதுவரை அவரிடமிருந்து எத்தகைய பதில்களும் வரவில்லை. நான் அதிலே சொல்லியிருந்தேன் முதுகெலும்பு இருந்தால் வாருங்கள் என்று, சிலநேரத்தில் அதனால்தான் அவர் வரவில்லையோ தெரியவில்லை.

ஆனால் நாம் ஒரு விடையத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது திரு.சுமந்திரன் அவர்களுடைய அண்மைக்கால கருத்தோ அல்லது இன்றைய கருத்தோ கிடையாது. அவருடைய நிகழ்ச்சி நிரலே இதுதான் என க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

Previous Post

பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது

Next Post

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை சுமந்திரனிடம் கேட்டறிந்த பிரதமர்

Next Post

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை சுமந்திரனிடம் கேட்டறிந்த பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures