Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சி திங்கள் முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் – மாவட்ட அரச அதிபர்

May 8, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி மாவட்டம் வரும் திங்கள் முதல் (11 ஆம் திகதி முதல் ) இயல்பு நிலைக்கு திரும்பும் என மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமை போல் செயற்படும் எனவும், பொது மக்கள் கூடுகின்ற மற்றும் சேவைகளை பெறுகின்ற நோக்கில் வருகின்ற போது முககவசம் அணிந்திருக்க வேண்டும், மேலும் கை கழுவும் ஏற்பாடுகளை நிறுவனங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும், சமூக இடைவெளி பேணப்படல் வேண்டும் போன்ற கொரோனா பாதுகாப்பு ஏற்பாட்டு நடைமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து தனியார் மறும் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டும் எனவும் அவர்தெரிவித்தார்.

இது தொடர்பில் அரச,மற்றும் தனியார் நிறுவனங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று மாவட்ட செயலக. மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 11ம் திகதி ஊடரங்கு தளர்த்தப்படும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் சேவை பெறுகின்ற இடங்களில் கைகழுவதற்குரிய வசதியை ஏற்படுத்தல், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல், வைத்தியசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் அரசதிணைக்களத்தலைவர்களின் தலைவர்கள் , தனியார் நிறுவங்களின் தலைவர்கள், முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என மாவட்டத்திலுள்ள அனைத்துப்பிரிவினரும் கலந்து கொண்டனர்.

Previous Post

எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்ற விடமாட்டோம் ; இராணுவ தளபதி

Next Post

கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

Next Post

கொழும்பில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures