திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், 19 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் திணைக்களத்தில் கையளிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

