Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து

February 13, 2018
in News, Politics, Uncategorized, World
0
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர் பூஷண் கப்பலில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆணையிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொச்சி துறைமுகத்தில் நடந்த விபத்து குறித்து மிகவும் வருத்தப்படுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Previous Post

இந்து துவ அமைப்புகள் மீண்டும் ரத யாத்திரை

Next Post

தனது தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே 2 மணிநேரமாக படுத்து உறங்கிய சிறுவன்

Next Post

தனது தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே 2 மணிநேரமாக படுத்து உறங்கிய சிறுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures