Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

April 18, 2017
in News
0
தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், இரண்டாக பிளவுபட்டுக் கிடக்கும் அ.தி.மு.க.வை இணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் அமைச்சர்கள் அனைவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்

அப்போது பேசிய தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வம், ஒற்றுமையாக செயல்படுவது குறித்து கூறிய கருத்தை வரவேற்கிறோம்.

கழகத்தை ஒற்றுமையாக நடத்தவே இந்த ஆலோசனைக் கூட்டம். டி.டி.வி.தினகரன் பதவி தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்படவில்லை.

அ.தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒற்றுமையோடு இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இது ரகசியக் கூட்டம் அல்ல. அனைவருக்கும் தெரிந்தே இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

சசிகலா ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக டிடிவி தினகரன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டிருக்கும் கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் பெங்களூருவில் இருந்து வந்தவுடன், அவருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

சொத்துக்களை யார் பெயரில் எழுதினார் ஜெயலலிதா? வெளியான உண்மை

Next Post

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

Next Post
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures