Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை தொல்லியல் திணைக்களம்  பலவந்தமான முறையில் கையகப்படுத்தவில்லை. அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களே அடையாளப்படுத்தப்படுகின்றன என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் தொல்லியல் சின்னங்கள் மற்றும் புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டன. தொல்லியல் புதையல்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அவ்வாறான நிலைமை தற்போது கிடையாது. மிகுதியாக உள்ள தொல்லியல் சின்னங்களையாவது எதிர்கால தலைமுறையினருக்காவது பாதுகாக்க வேண்டும்.

கடந்த கால முறையற்ற நிர்வாகத்தின் நிழலில் இன்றும் வாழ்பவர்கள் இனவாதம் மற்றும் மதவாத முரண்பாடுகளை ஏற்படுத்த தொல்லியல் சின்னங்களை திட்டமிட்ட வகையில்  அழிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. தொல்லியல் சின்னங்கள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கும் வகையில் ஒழுங்குவிதிகள் செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதால் சிறைச்சாலை நிரம்பி வழிகிறது. இட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் ஆட்சியில் இருந்தபோது  குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சிறந்த கல்வி முறைமையை அமுல்படுத்தியிருந்தால் பலர் இன்று குற்றவாளிகளாகியிருக்கமாட்டார்கள். 

முள்ளிக்குளம் பகுதிக்கான பாதயாத்திரை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த காட்டுவழிப் பாதை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காட்டுப் பகுதியில் வீதியமைக்க முடியாது. அவ்வாறான நிலையில் பாதயாத்திரை செல்வதற்கு அனுமதியளிப்பது பற்றி ஆராய வேண்டும். ஏனெனில் அப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

தற்போது கதிர்காம பாத யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. அதற்காக குறித்த காட்டுவழிப்பாதை திறக்கப்பட்டு யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச சபை மற்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொல்லியல் திணைக்களத்துக்காக கையகப்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண எம்.பி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறானது. தொல்லியல் திணைக்களத்துக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படவில்லை.

வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத்துறை திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம்  ஆகியவற்றில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இது ஒரு மதத்துக்கோ அல்லது இனத்துக்கோ மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு செயற்பாடல்ல என்றார்.

Previous Post

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

Next Post

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

Next Post
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures