Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

January 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

நாளை(23.01.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாளை (23.01.2023) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் இணைந்து பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

முதலில் கேள்விகளை நன்றாக படிக்கவும்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பரீட்சை ஆணையாளர், “இந்த மேலதிக 10 நிமிடங்கள், 3 மணிநேர கட்டுரை வினாத்தாள்களுக்கு வழங்கப்படுகிறது. பல்தேர்வு வினாக்கள் கொண்ட வினாத்தாள்களுக்கு மேலதிக நேரம் கொடுக்கப்படவில்லை.

பெரும்பாலான நேரங்களில், ஒரு மணிநேர வினாத்தாள் பல் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அது பல்தேர்வு இல்லை. நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத வேண்டும்.

அந்த வினாத்தாளிற்கு நீங்கள் முதலில் கேள்விகளை நன்றாக படித்து விடையளியுங்கள்.

பரீட்சையில் கூடுதலாக 10 நிமிடம் கொடுத்துள்ளோம். அதாவது காலை 8.30 மணிக்கு வழங்கப்படும் வினாத்தாளுக்கான, விடைத்தாள் 11.40 இற்கு பெற்றுக்கொள்ளப்படும்.எனவே மொத்தமாக 3 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.

Previous Post

நாளை முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும்

Next Post

மீண்டும் வரிசை யுகம்:அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Next Post
டீசலின் விலையை குறைக்க முடியாது | அமைச்சர் காஞ்சன விஜேசேகர

மீண்டும் வரிசை யுகம்:அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures