உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக நாளை (23) முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ரயில்வே திணைக்களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், இரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் நாளை முதல் நடைமுறைக்கு வருமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.