Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

November 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை. சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை ( நவ . 28) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஊடகங்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மறுக்கவில்லை.ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக செயற்படும் போது தோற்றம் பெறும் விளைவுகளுக்கு வரலாற்றில் பல சம்பவங்கள் சான்றாக உள்ளன.

பல்வேறு காரணிகளினால் நாட்டின் நற்பெயர் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் தவறான சித்தரிப்புக்கள் காணப்படுகின்றன.

ஒருசில ஊடகங்கள் ஊடகவியலின் அடிப்படை நெறிமுறைகள் மற்றும் ஊடக ஒழுக்கவியலுக்கு எதிராக செயற்படுவதை மறுக்க முடியாது.

நாட்டின் முன்னேற்றத்தில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.ஆகவே ஊடகங்கள் தாய் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

சமூக ஊடகங்களை கண்காணிக்கும் வகையிலான சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.சமூக ஊடகங்கள் தற்போது ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஊடகங்கள் உயர் ஊடக கலாசாரத்தை பேணும் வகையில் செயற்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயற்பட போவதில்லை என்றார்.

Previous Post

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை முன் கொண்டுசெல்ல முடியாது | லக்ஷ்மன் கிரியெல்ல

Next Post

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட முடியும் | மைத்திரி

Next Post
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட முடியும் | மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures