Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை முன் கொண்டுசெல்ல முடியாது | லக்ஷ்மன் கிரியெல்ல

November 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை முன் கொண்டுசெல்ல முடியாது | லக்ஷ்மன் கிரியெல்ல

நாடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் மாேதிக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.

அத்துடன் மக்கள் ஆணை இல்லாத இந்த அரசாங்கத்துக்கு சர்வதேசம் உதவி செய்யப்போவதில்லை என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்த இறுதிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலாளர் பான்கீ மூன் இலங்கைக்கு வந்தார். அபோது ஹிந்த ராஜபக்ஷ் கண்டியில் இருந்தார். அதனால் பான்கீ மூன் கண்டிக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன்போது அவர், யுத்தத்தின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன.சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன. அதனால் இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்றார். அதற்கு மஹிந்த ராஜபக்ஷ், ஐக்கிய நாடுகள் சபை விசாரணை மேற்கொள்ளத்தேவையில்லை.

நாங்கள் செய்வோம் என்றார். ஆனால் அந்த வாக்குறுதியை அவருடைய காலத்தில் நிறைவேற்றவில்லை. பரணகம விசாரணை அறிக்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த பரிந்துரைகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அதேபோன்று 2013 மற்றும் 2014 ஆகிய இரண்டு வருடங்களும் உள்ளக விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மனித உரிமை பேரவையில் எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்த பிரரணையை நிறைவேற்ற தவறினால் 2015இல் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதற்கு தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பொருளாதார தடையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே மஹிந்த ராஜபக்ஷ் முன்கூட்டியே தேர்தலுக்கு சென்றார்.

அத்துடன் 2015இல் நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் நாங்கள் மோதிக்கொள்ள செல்லவில்லை. எமது அதிகாரத்தை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அதனால்தான் நாங்களே மனித உரிமை ஆணைக்குழுக்கு சென்று, எமது நாட்டில் விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தோம். ஆனால் அன்று பொதுஜன பெரமுன அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த முறை மனித உரிமை ஆணைக்குழுவில் சரவதேச விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் காலம் செல்லும்போது மறந்துவிடும் என்றே அரசாங்கம் நினைத்துக்கொண்டிருக்கின்றது.

அவ்வாறு இடம்பெறுவதில்லை. இம்முறை சர்வதேச விசாரணைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் எமது நாடு தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது நாடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆயவற்றுடன் மாேதிக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இதனை அரசாங்கம் புரிந்துகொள்வதில்லை.

இது மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம். இந்த அரசாங்கம் காலாவதியான பொருளை போன்றது. தொடர்ந்து இந்த அரசாங்கத்துக்கு முன்னுக்கு செல்ல முடியாது. அதனால் புதிய அரசாங்கம் ஒன்று அமைத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

அத்துடன் இந்த அரசாங்கம் தமிழ் முஸ்லிம் மக்களை பகைத்துக்கொண்டது. முஸ்லிம் மக்களை பாரியளவில் நோவினைப்படுத்தியிருந்தது. கொவிட் தொற்று பரவுவதாக அடிப்படையற்ற கருத்ததொன்றை தெரிவித்துக்காெண்டு முஸ்லிம்களின் சடலங்களை எரித்தனர்.

முஸ்லிம் நாடுகள் பகைத்துக்கொண்டது. தற்போது முஸ்லிம் நாடுகளிடம் உதவி கேட்டுச்செல்கின்றனர். அரசாங்கம் வெட்கப்படவேண்டும். எனவே அரசாங்கம் எமது நாட்டை அழித்திருக்கின்றது.

அதனால் அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல பயப்படுகின்றது. மகா வீரர் என் சொலிக்கொண்டிருந்த தலைவர் ஒட்டுதொத்த நாட்டு மக்களையும் நடுத்தெருவில் விட்டு பின்கதவால் தப்பிச்சென்றார். எந்த எமது நாட்டின் எந்த தலைவரும் இவ்வாறு தப்பிச்செல்ல வில்லை.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

Previous Post

பால் மாவின் விலை அதிகரிக்கிறது

Next Post

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

Next Post
சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures