Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட முடியும் | மைத்திரி

November 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

யுத்த காரணிகளினால் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகள் சர்வதேச உறவை இல்லாதொழித்தது.

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட முடியும்.

அரசியல் பரிந்துரைகளுடன் வெளிநாட்டு துர்துவர்கள் நியமிக்கும் போது சர்வதேச உறவு சிறந்ததாக அமையாது. துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் பின்னணியில் வெளிவிவகார அமைச்சு,தூதுவராலய சேவைகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

பொருளாதார பாதிப்பினை கருத்திற் கொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் ஒருசில தூதரகங்கள் மூடப்பட்டமை கவனத்திற்குரியன.

2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்பட்டது என குறிப்பிடப்படுகிறது. யுத்த காரணிகளினால் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை காரியாலயத்தின் முன்பாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருசிலருடன் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

இதன்போது அரச தலைவர் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு இளநீர் வழங்கினார் இதனை தொடர்ந்து இலங்கை;கும்,ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டது.

அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வருகை தந்த போது அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் நவநீதம் பிள்ளையை தான் திருமணம் செய்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டார்.இவ்வாறான கருத்துக்கள் சர்வதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

சர்வதேச உறவு என்பது பரந்துப்பட்டது.சிறந்த கொள்கை,ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்ட விடயங்கள் சர்வதேச உறவின் போது அவதானத்திற் கொள்ளப்படும்.

நாட்டின் ஒருசில அரசியல்வாதிகளின் முழு விபரங்களும்,அவர்களின் அரசியல் செயற்பாடுகளையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துள்ளது.

முன்னாள் பிரதமர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க, எஸ்.டப்ள்யூ,ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்தில் கடைப்பிடித்த பிளவுப்படாத மற்றும் நடுநிலையான வெளிவிவகார கொள்கை இலங்கையை உலகத்துடன் ஒன்றிணைத்தது.வெளிவிவகார கொள்கை சிறந்ததாக காணப்பட்டால் மாத்திரமே அனைத்து நாடுகளுடன் இணக்கமாக செயற்பட முடியும்.

கடந்த காலங்களில் எமது அரச தலைவர்கள் சர்வதேச உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.அதன் பிரதிபலனை எதிர்கொண்டோம்.

நாட்டின் உள்ளக விவகாரங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் சர்வதேச உறவின் தன்மையை தீர்மானிக்கும்.எனது ஆட்சியில் சர்வதேச உறவு சிறந்த முறையில் காணப்பட்டது.

சர்வதேச உறவினை சிறந்த முறையில் கடைப்பிடித்த காரணத்தினால் தான் நல்லாட்சியை சர்வதேசம் அங்கிகரித்தது.

வெளிநாட்டு சேவைத்துறை மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பில் தேர்ச்சிப் பெற்றவர்களை தூதுவர்களாக நியமிக்க வேண்டும்.அரசியல் நோக்கத்துடன் வெளிநாட்டு தூதுவர்களை நியமிக்கும் போது சர்வதேச உறவு பாதிக்கப்படும்.

முக்கிய நாட்டுக்கு இலங்கை தூதுவராக அரசியல் பின்னணியில் ஒருவர் நியமிக்கப்பட்டார்.இவர் விடுமுறை காலத்தில் இலங்கைக்கு வருவதில்லை,அமெரிக்காவுக்கு விடுமுறை கழிக்க செல்கிறார்.இவ்வாறானவர்களினால் நாட்டுக்கு சேவை கிடைக்கப் பெறும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.

Previous Post

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா | கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

Next Post

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் அவதானம் | அலி சப்ரி

Next Post
வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் அவதானம் | அலி சப்ரி

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே அடக்கம் செய்வது தொடர்பில் அவதானம் | அலி சப்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026

Recent News

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures