Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு துணைபோக முடியாது | விமல் வீரவன்ச

October 30, 2021
in News, Sri Lanka News
0
தலைவிதியை தீர்மானிக்கும், தீர்க்கமான தினங்கள் – விமல்

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சர் இரகசியமான முறையில் அமைச்சரவைக்கு சமர்பித்து திருட்டுத்தனமாக அனுமதி பெற்றுக் கொண்டார்.

ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அவர் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தவில்லை. ஆகவே பொய்யுரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் நியூபோர்ட் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மிகுதியாக இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்தில் இருந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம், வெளியேற்றப்பட்டாலும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். ஏனெனில் எமக்கும், சாதாரண மக்களுக்கும் பிற நாடுகளில் வாழும் உரிமை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தின் காரணமாக அமைச்சரவை கூட்டம் நிகழ்நிலை முறைமை ஊடாக இடம்பெறுகிறது. இதனை ஒரு தரப்பினர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அமெரிக்காவின் நியூபோரட் நிறுவனத்திற்கு யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை நிரந்தரமாக வழங்கும் அமைச்சரவை பத்திரம் திருட்டுத்தனமான முறையில் சமர்ப்pக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம் இடம் பெற்று அடுத்த தினம் தான் நாங்கள் அறிந்தோம். அமைச்சரவையில் பேசப்படாத ஒரு விடயத்திற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன்.

இந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் நிதியமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் எதனையும் தெளிவுப்படுத்தவில்லை.பொய்யுரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அமைச்சு பதவிக்காக பொய்யை உண்மை என எம்மால் குறிப்பிட முடியாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையை பிறிதொரு தரப்பினர் கொள்ளையடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனத்திற்கு வலு சக்தி துறையின் அதிகாரம் சென்றால் இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் அதிகாரம் அமெரிக்கா கைவசம் செல்லும். திருட்டுத்தனமான அமைச்சரவை பத்திரம் தேசியத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாக கருதுகிறோம்.

கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பிலான ஏனைய இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசாங்கத்தை பிளவுப்படுத்தவும், அரசியல் அநாதைகளாக செயற்படும் எதிர்க்கட்சினரை உயிர்ப்பிக்கவும் எமக்கு அவசியமில்லை. மக்களாணைக்கு அமைய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லவே முயற்சிக்கிறோம்.

தவறுகளை திருத்தவே அரசாங்கத்திற்குள் இருந்துக் கொண்டு போராடுகிறோம்.எவ்வித அச்சுறத்தல் வந்தாலும் அதனை பொருட்படுத்தமாட்டோம். அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் நாட்டுக்காக போராடுவோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய ஆணையை சிறந்த முறையில் செயற்படுத்த முயற்சிக்கிறோம்.

மிகுதியாகவுள்ள ஒப்பந்தத்தை கைச்சாத்திட ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டு ம்க்கள் அனைவரும் ஒன்றினைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். மக்கள் வழங்கிய ஆணைக்கு மதித்து  தவறான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

அமைச்சு பதவிகளை காட்டிலும் நாடு முக்கியம் என்பதற்காகவே போராடுகிறோம்.எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேச பற்றாளர்களாகவும்,ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டுக்கு எதிரிகளாகவும் செயற்பட முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்தின் தவறை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து,அதற்கு நாங்கள் துணை சென்றால் மக்கள் எம்மை முழுமையாக புறக்கணிப்பார்கள். எமக்கும், சாதாரண மக்களுக்கும் பிற நாடுகளளுக்கு சென்று வாழும் உரிமை ஏதும் கிடையாது இருப்பதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மிகுதியாக உள்ள இரண்டு ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

மக்களாணையை கொள்ளையடிக்க முயற்சிக்கும் தரப்பினரது நோக்கத்தை தோல்வியடைய செய்ய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஸ்கொட்லாந்து செல்லும் கோத்தாவிற்கு எதிராக விளம்பரம்!

Next Post

கோத்தாவுக்கு தலையாட்டினால் எதிர்காலம் எம்மை சபிக்கும் | உதய கம்மன்பில

Next Post
தமிழீழம் உருவாகிவிட்டது! பொலிஸ்மா அதிபரின் மௌனம் இதை உணர்த்துகின்றது? பெரிய சந்தேகம்

கோத்தாவுக்கு தலையாட்டினால் எதிர்காலம் எம்மை சபிக்கும் | உதய கம்மன்பில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி – அரசின் புதிய திட்டம்

June 28, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி – அரசின் புதிய திட்டம்

June 28, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures