Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா

August 4, 2021
in News, ஆன்மீகம்
0
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலைப்பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திருவிழாக்கள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலைப்பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆடிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, 9.15 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு மேல் சாஸ்தா பிறப்பு, தீபாராதனை நடைபெற்றது.

ஆடிக்கொடை விழாவில் நேற்று அபிஷேக அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு கும்பம் புறப்படுதல், கும்பம் உள்பிரகாரம் சுற்றி வருதல், தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு மேல் கும்பம், தீச்சட்டி புறப்படுதல், உள்பிரகார பவனியைத் தொடர்ந்து படப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவில் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலுக்கு வெளியே தடுப்புகள் முன்பு நின்றவாறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முளைப்பாரியை தீர்த்தத்தில் கரைத்தல், அலங்கார தீபாராதனை, கும்பம் புறப்பட்டு உள்பிரகாரம் சுற்றி வருதல், மஞ்சள் நீராடுதல், தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஆடிக்கொடை ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கலைவாணன் செய்திருந்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்

Next Post

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்தவாறே காவிரி தாயாருக்கு சீர்கொடுத்த நம்பெருமாள்

Next Post
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்தவாறே காவிரி தாயாருக்கு சீர்கொடுத்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்தவாறே காவிரி தாயாருக்கு சீர்கொடுத்த நம்பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures