Saturday, May 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒருநாள் தொடரிலும் மாஸ் காட்டும் இங்கிலாந்து ; 5 விக்கெட்டுகளால் வெற்றி

June 30, 2021
in News, Sports
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிறிஸ் வோக்ஸின் மிரட்டலான பந்து வீச்சுடன் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் களத்தடுப்பை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா மாத்திரம் இங்கிலாந்தின் பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடித்தாட ஏனைய முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

பத்தும் நிஷாங்க 5 ஓட்டத்துடனும், அசலங்க டக்கவுட்டுடனும், சானக்க ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் பெரேரா – வர்னிந்து ஹசரங்க ஜோடி, இங்கிலாந்தின் பந்து வீச்சுகளை சாமர்த்தியமாக எதிர்கொண்டு ஆடுகளத்தில் நிலைத்தாடியது.

இவர்கள் இருவரும் மொத்தமாக 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக அணிக்கு பெற்றுக் கொடுத்தனர்.

28.4 ஆவது ஓவரில் ஹசரங்க மொத்தமாக 65 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களுடன் கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய லக்ஷான், ரோமேஸ் மெண்டீஸ் ஆகியோரும் சொல்லும்படியான ஓட்டங்களை பெறாது ஆட்டமிழக்க, ஆரம்ப வீராக களமிறங்கிய குசல் பெரேராவும் மொத்தமாக 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணி 32.2 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.

பின்னர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத இலங்கை 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 10 ஓவர்களுக்கு பந்து பரிமாற்றம் மேற்கொண்டார். அதில் 5 ஓவர்களுக்கு எதுவித ஓட்டங்களையும் வழங்காது ஏனைய ஓவர்களில் 18 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, வில்லி 3 விக்கெட்டுகளையும், மொய்ன் அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

186 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோனி பெயர்ஸ்டோ, லிவிங்ஸ்டனுடன் இணைந்து அதிரடி காட்டினார்.

இவர்கள் இருவரும் இணைந்து 29 பந்துகளில் 54 ஓட்டங்களை சேர்த்தனர். பெயர்ஸ்டோ 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை குவித்தார்.

மறுமுனையில் லிவிங்ஸ்டன் 12 பந்துகளில் ஒன்பது ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அணியின் முதல் விக்கெட் 54 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

பின்னர் ஜோனி பெயர்ஸ்டோ 43 ஓட்டத்துடனும், அடுத்தடுத்து களமிறங்கிய இயன் மோர்கன் 6 ஓட்டத்துடனும், சாம் பில்லிங் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இங்கிலாந்து 11.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 80 ஓட்டங்களை பெற்றிருந்தது.

5 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மொய்ன் அலி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் காப்பாளர் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்தார். எனினும் அந்த பிடியெடுப்பை நழுவ விட்டார் குசல் பெரேரா.

அந்த துரதிர்ஷ்டமான சம்பவமே பின்னர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோ ரூட் – மொய்ன் அலி ஜோடி சேர்ந்தாட இங்கிலாந்து 30 ஓவர்களில் 162 ஓட்டங்களை குவித்தது.

வெற்றியின் இறுதித் தருவாயில் மொய்ன் அலி 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சாம் குர்ரன் களமிறங்கினார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றி வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் ஜோ ரூட் 79 ஓட்டங்களுடனும், சாம் குர்ரன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் துஷ்மந்த சாமர 3 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது போட்டி ஜூலை 1 லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

கடும் வெப்பத்தால் கனடாவில் பலர் உயிரிழப்பு

Next Post

கோண்டாவிலில் வன்முறை 4 பேர் படுகாயம்!

Next Post
Easy24News

கோண்டாவிலில் வன்முறை 4 பேர் படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025

Recent News

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures