Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சங்கானையில் ஏன் கொரோனா ஊசி ஏற்றப்படவில்லை – மக்கள் கேள்வி

June 2, 2021
in News, Politics, Sri Lanka News
0

யாழ். மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஏனைய 13 பிரிவுகளிலும் நேற்று பொதுமக்களுக்கான கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட போதிலும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏன் ஏற்றப்படவில்லை என இந்தப் பிரதேசத்தில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஓரளவுக்கேனும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றியிருக்கின்ற போதிலும், 50,000 வரையான சனத்தொகையைக் கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் இதுவரை 500 வரையான பொதுமக்களுக்குக்கூடத் தடுப்பூசி ஏற்றப்படவில்லை எனவும் மேற்படி சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டைக் கைவிட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரியும் சேர்ந்து பி.சி.ஆர். செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் மக்களை பலியெடுத்துக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா நோய்க்கு பல இலட்சக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கின்றனர். ஒரு தடுப்பூசி கிடைக்காதா என மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கிடைத்த தடுப்பூசிகளைப் பெற்று பொதுமக்களுக்கு ஏற்றுவதில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏன் ஆர்வம் காட்டவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

04 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், 11 குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், ஒரு மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், ஒரு மேற்பார்வை குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் அதைவிட பணியாளர்கள், சங்கானை, வட்டுக்கோட்டை, பாணாவெட்டி, போன்ற வைத்தியசாலை ஆளணியினர்  என ஓரளவுக்கேனும் ஆளணியைக்கொண்டு இயங்கும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை 500 வரையான பொதுமக்களுக்கு கூட இதுவரை தடுப்பூசிகளை ஏற்றியிருக்கவில்லை.

எனினும், குறைந்த ஆளணியுடன் இயங்கும் காரைநகர், ஊர்காவற்றுறை உள்ளிட்ட சில சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் கூடிய அடைவு மட்டத்தைக் காட்டியிருக்கின்றனர். ஆனால், 30 வயதுக்கு மேற்பட்ட, ஏறக்குறைய 32 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் இதுவரை அது ஏன் சாத்தியப்படுத்தப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றும் பணி இன்னும் இரு தினங்களில் முடிவடையவுள்ள நிலையில், சுழிபுரம் மத்தி மற்றும் பனிப்புலம் ஆகிய இரு இடங்களில் மாத்திரமே தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எனினும், இரு தினங்களிலாவது வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளணி உதவியைப் பெற்று பல இடங்களில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம்  சில ஆயிரம் வரையான மக்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர்.

Previous Post

ராஜபக்‌ச அரசுடன் தமிழக அரசு உறவை வலுப்படுத்த வேண்டும்

Next Post

இலங்கையில் கொரோனா பலி 1500 ஐ கடந்தது!

Next Post
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

இலங்கையில் கொரோனா பலி 1500 ஐ கடந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures