Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நேற்று சாட்சியம் வழங்கிய றிசாட் ;இன்றும் விசாரணைக்கு அழைப்பு

September 15, 2020
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம், ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் நேற்று வாக்கு மூலம் அளித்தனர்.

ஆணைக் குழுவினினால் அனுப்பட்டிருந்த அறிவித்தல் பிரகாரம் அவ்விருவரும் நேற்று முற்பகல் 9.15 மணியளவில் அங்கு ஆஜராகியிருந்த நிலையில் நீண்ட வாக்கு மூலங்கள் அவர்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன,

முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சரான எம்.எச்.ஏ ஹலீமிடம் சுமார் ஐந்தரை மணி நேரமும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரமும் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதன்படி எம்.எச்.ஏ. ஹலீமிடம் பி.ப.2.30 மணியளவிலும், ரிஷாத் பதியுதீனிடம் மாலை 6.15 மணியளவிலும் நேற்றைய வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய நேற்று முற்பகல் வேளையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள ஆணைக் குழுவுக்கு சென்ற இவ்விருவரிடமும் இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக குறித்த ஆணைக் குழு தெரிவித்தது.

எவ்வாறாயினும் இன்றைய தினம் மீளவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் தொடர்பில் பல தரப்பினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் குறித்து இவ்விருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

Previous Post

கசிப்பு பையை கைவிட்டு ஓடிய கிளிநொச்சி நபர்கள்

Next Post

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் ;சிவாஜிலிங்கம் கோரிக்கை

Next Post

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் ;சிவாஜிலிங்கம் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures