Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொய் சாட்சி வழங்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

August 4, 2020
in News, Politics, World
0

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பொய் சாட்சியை வழங்கியமை சம்பந்தமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலான வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சி கூறியதாகவே உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டு, கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின், எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Previous Post

வாக்குச்சாவடிகள் அருகில் சட்டவிரோதமாக மாதிரி வாக்குச் சீட்டு விநியோகம்

Next Post

முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம்

Next Post

முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures