Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தப்பி சென்ற மேலும் ஒரு கொரோனா நோயாளி ; சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல்!

July 26, 2020
in News, Politics, World
0

ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதென அதன் பிரதான வைத்தியர் ஹசித அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களில் நான்கு பேர் இந்தியாவின் சென்னையில் இருந்தும், மேலும் இருவர் பெலருஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 656 தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை கொவிட்-19 தொற்றுறுதியான 25 ஆயிரத்து 826 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன் முப்படையினர் ஊடாக முன்னெடுக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 606 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம்

Next Post

சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தி காணொளி எடுத்துவந்த ஆசிரியர்!

Next Post

சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தி காணொளி எடுத்துவந்த ஆசிரியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures