Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

113 ஆசனங்கள் பெறவே வக்கில்லை; மூன்றிலிரண்டு எப்படிக் கிடைக்கும்?

June 15, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச அரசு 113 ஆசனங்களைப் பெறுவதற்குக்கூட நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட அரசு150 ஆசனங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எப்படிப் பெறப் போகின்றது?”என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கயந்த கருணாதிலக.

இந்த அரசின் தோல்விகள் குறித்து மக்கள் நன்கு அறிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு இந்த அரசு திட்டமிடுகின்றது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கத்துடனேயே தேர்தல் பரப்புரையை அரசு ஆரம்பித்தது. எனினும், தற்போது 113 ஆசனங்களைப் பெறுவதற்குக்கூட அரசு நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அனைத்து மக்களையும் பாதித்துள்ளது. மக்களை ஏமாற்றியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வலுவான கூட்டணியாக மாறி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார் .

Previous Post

அடுத்த பிரதமர் நானேதான்; சிறையில் கைதிகள் கூறினர் ராஜித அதிரடித் தகவல்

Next Post

தமிழர்களுக்கு மஹிந்த அணி அழுத்தம்

Next Post

தமிழர்களுக்கு மஹிந்த அணி அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures