Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு இல்லை!

May 31, 2020
in News, Politics, World
0

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டமைப்பு சென்றுவிட்டது எனக் கூறுவது கற்பனைக் கதை. அதை முற்றாக நிராகரிக்கின்றேன். கட்சியின் செயற்குழு, மத்திய குழு, நாடாளுமன்றக் குழு கூடியே முடிவுகள் எடுக்கின்றோம். யாரும் தனிப்பட்ட ரீதியில் முடிவெடுப்பதில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சூரியன் எப்.எம். வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ” நாம் எல்லோரும் ஒன்றாகச் செயற்பட சில கருமங்கள் எடுத்தோம். அதன்படி, ஒற்றுமையாக ஒரு அமைப்பை எடுத்தோம். அந்தச் செயற்பாட்டை இன்றுவரை தொடர்ந்து வருகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள் எமது அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பினார்கள். அதை நாம் வரவேற்றோம். 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனமாகிய பின்னரும், அது தொடர்கின்றது. இலக்கை அடையும் வரை தொடர்வோம்” – என்றார்.

ஆயுதப் போராட்டம் குறித்த கேள்விக்கு, “ஆயுதப் போராட்டத்தின் சரி, பிழைகளை நாம் பேசவில்லை. இன்னொரு ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை. சிங்கள, தமிழ் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை. அதையே வலியுறுத்துகின்றோம்” – என்று அவர் பதிலளித்தார்.

ஆயுதப் போராட்டம் பற்றிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துப் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “சுமந்திரன் பேசியது தனிப்பட்ட விடயம். அது பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. இந்த விடயங்களைப் பாவித்து எமது கட்சியை உடைக்க பலர் முயற்சிக்கிறார்கள். நாம் அதற்கு ஒத்தழைக்க மாட்டோம்.

சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்றுவிட்டது எனக் கூறுவது கற்பனைக் கதை. அதை முற்றாக நிராகரிக்கின்றேன். கட்சியின் செயற்குழு, மத்திய,குழு, நாடாளுமன்ற குழு கூடியே முடிவுகள் எடுக்கின்றோம். யாரும் தனிப்பட்ட ரீதியில் முடிவெடுப்பதில்லை” – என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரை அடையாளம் கண்டுவிட்டீர்களா என்ற கேள்விக்கு, “:அது மக்களின் அதிகாரம்; கட்சியின் அதிகாரம். உரிய நேரத்தில், உரியவர் அந்தப் பொறுப்பில் வருவார். இந்தப் பொறுப்பில் இருப்போம் என்று நாம் கற்பனை செய்தோமா? உண்மையாகவும், நேர்மையாகவும் மக்கள் பணியைச் செய்து வந்தால், மக்கள் தமது தலைவர்களைத் தீர்மானிப்பார்கள்” – என்று பதிலளித்தார்.

இலங்கையின் தேசியக் கொடியை ஏற்கிறீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “நான் தேசியக் கொடியை மதிக்கின்றேன். தேசியக் கொடியை ஏற்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விகளை ஏன் கேட்கின்றீர்கள்? இதெல்லாம் தேவையில்லாத கேள்விகள். இந்தக் கேள்விகளால் எமது சமூகத்திற்கு என்ன நன்மை? இப்படியான கேள்விகளால் எமது மக்களைக் குழப்ப பலர் முயற்சிக்கிறார்கள். ஊடகங்களும் முயற்சிக்கின்றன. இப்படியான கேள்விகளுக்குப் பதிலளித்து, அதற்கு நான் உதவலாமா? இப்படியான கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். இப்படியான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்” – என்றார்.

Previous Post

ராஜபக்ச அரசு கவிழ்வது உறுதி சஜித் அணி திட்டவட்டம்

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 505 பேர் கொரோனா நோயாளிகள்

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 505 பேர் கொரோனா நோயாளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures