Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக வீரர் சுதர்சன் சதம் குவித்து அசத்தல் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

July 21, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
தமிழக வீரர் சுதர்சன் சதம் குவித்து அசத்தல் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி குழுவுக்கான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணியை 8  விக்கெட்களால் இந்திய ஏ அணி இலகுவாக வெற்றிகொண்டது.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், நிக்கின் ஜோஸ் பெற்ற அரைச் சதம், ராஜ்வர்தன் ஹங்கார்கேகார் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இந்திய ஏ அணியின் வெற்றியை இலகுபடுத்தின.

இந்த சுற்றுப் போட்டிக்கான இரண்டு குழுக்களிலும் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக இந்திய ஏ அணி அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி தோல்வி அடைந்த போதிலும் அரை இறுதியில் விளையாடுவதை இந்தியாவுடன் ஏற்கனவே உறுதிசெய்துகொண்டிருந்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் புதன்கிழமை (19) நடைபெற்ற பகல்-இரவு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் கசிம் அக்ரம் (48), ஷாபாஸ்  பர்ஹான் (35), முபாசிர் கான் (28), ஹசீபுல்லா கான் (27), மெஹ்ரான் மும்டாஸ் (25) ஆகிய ஐவரே 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ராஜ்வர்தன் ஹங்கார்கேகார் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மனவ் சுதார் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

206 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 48 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 210  ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

சாய் சுதர்ஷன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் 3 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி  இந்திய ஏ அணியின் வெற்றியை இலகுபடுத்தினார்.

ஆரம்ப விக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவடன் 58 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் நிக்கின் ஜோஸுடன் 99 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் யாஷ் துல்லுடன் 53 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷன் பகிர்ந்தார்.

சாய் சுதர்ஷன் 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இந்திய ஏ அணியின் வெற்றிக்கு மேலும் 15 ஓட்டங்களே தெவைப்பட்டது.

ஆனால், சாய் சுதர்ஷன் சதம் குவிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த யாஷ் துல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஓட்டங்கள் பெறுவதைத் தவிர்த்தார். 35 ஓவர்கள் நிறைவில் சாய் சுதர்ஷனுடன் கலந்துரையாடிய துல், அவர் சதம் குவிப்பதை உறுதிசெய்தார்.

36ஆவது ஓவரில் ஒரு பவுண்டறியையும் 2 சிக்ஸ்களையும் விளாசிய சுதர்ஷன் சதத்தைப் பூர்த்திசெய்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார்.

110 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்ஷன் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரைவிட நிக்கின் ஜோஸ் 53 ஓட்டங்களையும் யாஷ் துல் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்கைளயும் அபிஷேக் ஷர்மா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தப் போட்டி முடிவை அடுத்து பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் விளையாடவுள்ளன.

அதே தினம் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப் போட்டியில் (பகல் இரவு) பங்களாதேஷ் ஏ அணியை இந்திய ஏ அணி எதிர்த்தாடும்.

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

Previous Post

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

Next Post

சீயான் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Next Post
இதிலும் அவர் எனக்கு கிடைக்கவில்லை | நடிகர் விக்ரம்

சீயான் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures