Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

115 தங்கப் பதக்கங்களுடன் மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானது

August 28, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
115 தங்கப் பதக்கங்களுடன் மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானது

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மேல் மாகாணம் 115 தங்கம், 78 வெள்ளி, 89 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சம்பியனானது. 

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மேல் மாகாணம் சமபியனானது இது 46ஆவது தடவையாகும்.

மத்திய மாகாணம் 39 தங்கம், 45 வெள்ளி, 50 வெண்கலப் பதக்கங்களுடன் 2ஆம் இடத்தையும் தென் மாகாணம் 30 தங்கம், 37 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன.

வட மேல் மாகாணம் (26 தங்கம், 35 வெள்ளி, 39 வெண்கலம்), வட மத்திய மாகாணம் (17 – 15 – 34), சப்ரகமுவ (13 – 22 – 51), ஊவா மாகாணம் (10 – 13 – 33). கிழக்கு மாகாணம் (7 – 9 – 8), வட மாகாணம் (5 – 9 – 2) ஆகியன முறையே 4, 5, 6, 7, 8, 9ஆம் இடங்களைப் பெற்றன.

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 50.59 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றியீட்டி 1101 சர்வதேச தர புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாண வீரர் கே.எம்.டி. தர்ஷன அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகத் தெரிவானார்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.80 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றியீட்டி 1096 சர்வதேச தர புள்ளிகளைப் பெற்ற நடீஷா ராமநாயக்க அதிசிறந்த பெண்  மெய்வல்லுநராகத்   தெரிவானார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.65 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற சப்ரகமுவ மாகாண வீரர் வை.சி.எம். யோதசிங்க அதிவேக மனிதனாகவும் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.25 செக்கன்களில்  நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற  மத்திய மாகாண வீராங்கனை எப். ஷபியா யாமிக் அதிவேக பெண்ணாகவும் தெரிவாகினர்.

புதிய போட்டி சாதனைகள் 

மெய்வல்லுநர் போட்டிகளில் கடைசி நாளான சனிக்கிழமை 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. இதற்கு அமைய 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் மொத்தம் 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் மேல் மாகாண வீரர் எல்.சி. குமாரசிறி 16.23 மீற்றர் தூரம் பதிவு செய்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார்.

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.16 செக்கன்களில் நிறைவுசெய்த மேல் மாகாண வீரர் ஐ. லக்விஜய, ஒரு நாளுக்கு முன்னர் நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை (14.18 செக்.) முறியடித்த புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார்.

பெண்களுக்கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 41.96 செக்கன்களில் நிறைவு செய்த தென் மாகாண அணி (என். லக்மாலி, நிமாலி லியனஆராச்சி), கயன்தினா அபேரட்ன, நடீஷா ராமநாயக்க) புதிய போட்டி சாதனை நிலைநாட்டியது.

இந்த சாதனையுடன் மெய்வல்லுநர் போட்டிகளில் மொத்தமாக 5 புதிய போட்டி சாதனைகள் பதிவாகின.

போட்டியின் ஆரம்ப நாளான வியாழக்கிழமை (24) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.50 மீற்றர் உயரம் தாவிய யாழ். பல்கலைக்கழக வீராங்கனை நேசராசா டக்சிதா இம்முறை முதலாவது போட்டி சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

அதே தினத்தன்று பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வி. லக்மாலி (44.59 மீற்றர்) புதிய போட்டி சாதனையைப் படைத்திருந்தார்.

இரட்டை தங்கம் வென்றவர்கள்

பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் வத்சலா ஹேரத் (10000 மீற்றர, 5000 மீற்றர்),  நடீஷா ராமநாயக்க (200 மீற்றர், 400 மீற்றர்), கயன்திகா அபேரட்ன (800 மீற்றர், 1500 மீற்றர்) ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

கயன்திகா, நடீஷா ஆகிய இருவரும் தொடர் ஓட்டப் போட்டியிலும் தங்கம் வென்ற அணியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

கடைசி நாளான சனிக்கிழமை (26) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய மாகாண வீரர் கே. சண்முகேஸ்வரன் (31:37.43) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப்போட்டியில் சப்ரகமுவ மாகாண வீரர் பி. மதுரங்க (31:37.06) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஒவ்வொரு வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் ஆண், பெண் இருபாலாரிலும் அதி சிறந்த போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதான பிசில்களை வழங்கினார்.

Previous Post

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் | வட, கிழக்கில் மாபெரும் போராட்டங்கள்

Next Post

நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல : தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளையே எதிர்க்கிறோம் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Next Post
நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல : தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளையே எதிர்க்கிறோம் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல : தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளையே எதிர்க்கிறோம் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures