ஹொங் கொங் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நேற்று 16வது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹொங் கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மூலத்திற்கு எதிராக இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும், குறித்த சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொள்வதாக ஹொங் கொங் அரசாங்கம் அறிவித்த பின்னரும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வார இறுதி நாளான நேற்று ஹொங் கொங்கின் பல்வேறு இடங்களிலும் ஏராளமானவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டக்களால் சுட்டும் போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டினர்.
இதன்போது போராட்டக்காரர்களில் சிலரும் பொலிஸார் மீது கற்களை வீசியிருந்ததுடன், பெட்ரோல் குண்டு ஒன்றும் பொலிஸாரை நோக்கி வீசப்பட்டது.
அத்துடன் அரச கட்டடமொன்றில் பறந்து கொண்டிருந்த சீன தேசியக் கொடியை போராட்டக் குழுவினர் கழற்றி எரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.