மஹராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தேர்தலை சந்திக்க தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “தேர்தல் அறிவிப்புகளை வரவேற்கிறோம். தேர்தல்களை சந்திக்க தயார்.
வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, விவசாயிகளின் துயரங்கள் உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகள் அடிப்படையில் நாங்கள் இந்த தேர்தல்களை சந்திப்போம்.
அரசாங்கம் எந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறதோ, அந்த உண்மையான பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி முழு பலத்தோடு எழுப்பும்.
தேசிய தலைநகருக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற அரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேச பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி எழுப்பும்.
சமீபத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பெரும் சரிவை சந்தித்தது பற்றியும் இந்த தேர்தலின்போது மக்களுக்கு எடுத்துக்கூறுவோம்” எனத் தெரிவித்தார்.
மஹராஷ்டிரா அரியானா ஆகிய மாநிலங்களுக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.