அரசாங்கத்தின் பங்காளர்களாகவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரும் தற்பொழுது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டில் பங்கெடுப்பதாகவும், அவர்கள் ஸ்ரீ ல.சு.க.யைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து பிரச்சினை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 15 பேருக்கும் நிலையான கொள்கையொன்று இல்லாதுள்ளது. அரசியல்வாதிக்கு இது இருக்க முடியாத ஒன்று.
அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்து சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்த அவர்கள், திடீரென அரசாங்கம் பிழையாக விளங்க முடியாது எனவும் துமிந்த திஸாநாயக்க மேலும் கூறினார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.