கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் என எதுவுமே நடக்கவில்லை.. ஆனால் இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டும் தனது படங்களை ஒடிடியில் வெளியிடுவது, கொரோனா வைரஸ் என்கிற பெயரிலேயே படம் எடுத்து அதன் டிரைலரையும் வெளியிடுவது, ஊரடங்கு சமயத்திலேயே புதிய படங்களை அறிவிப்பது என பிஸியாகவே இருக்கிறார். சமீபத்தில் கூட அரைமணிநேரத்திற்கு குறைவாக ஓடக்கூடிய ஆபாசப்படம் ஒன்றை எடுத்து ஒடிடியில் வெளியிட்டு செமத்தியான லாபம் பார்த்தார்.
இவரது இத்தனை முயற்சிகளுக்கும் இவரிடமிருந்த தொழில்நுட்ப குழுவினர்தான் பக்கபலமாக இருந்தனர்.. கொரோனா தாக்கம் பற்றி கூட கவலைப்படாமல் ராம்கோபால் வர்மாவுக்காக வேலை பார்த்துவந்தனர். இந்த நிலையில் இந்த குழுவினரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ராம்கோபால் வர்மாவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும் மீதியுள்ள தொழில்நுட்ப குழுவினரும் கொரோனா அச்சம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதை விரும்பவில்லை.. இதனால் வேறு வழியின்றி தனது படப்பிடிப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டாராம் ராம்கோபால் வர்மா.