Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருளை கடத்துவோருக்கு உச்சபட்ச தண்டனை | விஜேதாச ராஜபக்ஷ

February 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருளை கடத்துவோருக்கு உச்சபட்ச தண்டனை | விஜேதாச ராஜபக்ஷ

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடமுள்ள 3000 கிலோ கிராம் போதைப்பொருட்களை அழிப்பதற்கு புதிய சட்டம் மற்றும் வழிமுறை தயாரிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயன்முறைகளை அதிகரிக்கும் நோக்கில் புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களமானது அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும் வேகம் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டின் பின்னர் உயர் தரத்துடன் கூடிய முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கும் திணைக்களமாகவும் இது காணப்படுகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நச்சுத்தன்மையுடைய போதைப்பொருள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் மூலம் 5 கிராமிற்கும் அதிக போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவதற்கும் , 5 கிராமை விட குறைவான போதைப்பொருளை வைத்திருப்பவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பதற்கான புதிய சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

நீதி அமைச்சு, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் , பொலிஸ் மற்றும் ஆபத்தான ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை என்பன இணைந்து சட்ட பூர்வமான வழிமுறை குறித்து கலந்துரையாடி வருவதோடு , இதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கமைய ஒரே சந்தர்ப்பத்தில் 1000 கிலோ கிராம் போதைப்பொருளை அழிப்பதற்கான பொறிமுறையை பொறுத்தமான இடத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அழிப்பதற்கு 3000 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் காணப்படுகின்றன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெருமளவில் அதிகரித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியாது.

குறிப்பாக மீன்பிடி படகுகள் மூலம் தெற்கு மற்றும் வடக்கு கடற்பரப்பில் இருந்து போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருகின்றனர். கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வரும் சர்வதேச கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதோடு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் முறைமை தயாரிக்கப்படும் என்றார்.

Previous Post

பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டு அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது | ஹர்ஷ டி சில்வா

Next Post

பிலிப்பைன்ஸில் விமானம் வீழ்ந்த சம்பவத்தில் ஆஸி பொறியியலாளர்கள், கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோரும் பலி

Next Post
பிலிப்பைன்ஸில் விமானம் வீழ்ந்த சம்பவத்தில் ஆஸி பொறியியலாளர்கள், கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோரும் பலி

பிலிப்பைன்ஸில் விமானம் வீழ்ந்த சம்பவத்தில் ஆஸி பொறியியலாளர்கள், கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோரும் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures