Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் பேராசிரியர்கள் | கல்வி அமைச்சு

April 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்காகவும் பொதுவாக விதிக்கப்பட்டிருக்கும் வரி விடயம் தவிர, ஏனைய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சும் , நிதி அமைச்சும் இணக்கப்பாட்டுடன் மாற்று தீர்வு வழங்கி இருப்பதால் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கமும் உயர்தர மாணவரின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இணைந்துகொள்வதற்காக விரைவாக பதில் வழங்கும் என்பது  இலட்சக்கணக்கான மாணவர்கள் , பெற்றோர் மற்றும் கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகும் என கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது. 

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக வியாழக்கிழமை (6) ஆசிரியர் சங்கம் ஒன்றினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்து, ஊடகங்களில் பிரசாரமான விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,     

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பப்படிவம் கோரும்போது, அதற்காக மொத்த தேவையாக இருந்த 19ஆயிரம் மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையில் 12ஆயிரம் பேரே விண்ணப்பித்திருந்தனர். 

இந்த நிலைமையை உணர்ந்துகொண்ட கல்வி அமைச்சர், ஆசிரிய தொழிற்சங்கங்களுடள் கலந்துரையாடி, விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வழங்கப்படுகின்ற கட்டணத்துக்கு மேலதிகமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டடுவந்த 500 ரூபா கொடுப்பனவை 2ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கும் 81 கிலாே மீட்டருக்கு அதிக தூரத்தில் இருந்து விடைத்தாள் மதிப்பிடுவதற்கு வரும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 2900ரூபா வரை அதிகரிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்  அதற்காக திறைசேரியிடமிருந்து மேலதிக ஒதுக்கீடுகளையும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

அத்துடன் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் கடந்த மாதம் 3ஆம் திகதி முதலாவது கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் திறைசேரி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதன் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களுக்காகவும் பொதுவாக விதிக்கப்பட்டிருக்கும் வரி விடயம் தவிர, ஏனைய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு, நிதி அமைச்சும் இணக்கப்பட்டுடன் மாற்று தீர்வு வழங்கி இருப்பதுடன் அதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்துக்கும் அறிவிறுத்தி இருக்கிறது.

அத்துடன் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக ஊடக அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டது.

கல்வி அமைச்சு இந்த முக்கியமான பிரச்சினை தொடர்பாக கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆரம்பத்தில் இருந்தே ஆசிரிய தொழிற்சங்கம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரிய சங்கங்களும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்க்கமான நடவடிக்கைக்கு வந்துள்ளதுடன் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தற்போது ஆசிரிய தொழிற்சங்கம் முன்னேற்றகரமான பதிலாேன்றை வழங்கி இருப்பதுடன் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கமும் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இணைந்துகொள்வதற்காக விரைவாக பதில் வழங்கும் என்பது இலட்சக்கணக்கான மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.

Previous Post

ATAஆல் பெரும் ஆபத்து | சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை

Next Post

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடித்தே ஆக வேண்டும் – விஜித்த ஹேரத்

Next Post
அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடித்தே ஆக வேண்டும் - விஜித்த ஹேரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures