மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் செய்துள்ளார்.
கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியர் திருச் சொரூபமே இவ்வாறு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.